Header Ads

Breaking News
recent

நோர்வேயில் இருந்து ஆட்களை சேர்க்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

நோர்வேயில் உள்ள அகதி முகாம்களில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நகரங்களை நோக்கி செல்லும் அகதிகள், தீவிரவாதிகளாக ஆக்கப்படலாம் என அதிகாரிகள் ஏற்கனவே தங்கள் கவலையை தெரிவித்திருந்த நிலையில், இத் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வரவேற்பு மையங்கள் மற்றும் அடைக்கலம் கேட்டு வந்தவர்களை தீவிரவாதிகள் அணுகியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நோர்வே பொலிஸ் பாதுகாப்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Powered by Blogger.