Header Ads

Breaking News
recent

றோமன் கத்தோலிக்க ஆலயங்களும் பூட்டு : ஆராதனை நிகழ்வுகளோ, திருப்பலியோ நடைபெற மாட்டாது.

Copy :Divine Mercy Shrine

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் (17/03/2020) எதிர்வரும் 28/03/2020 வரை திருகோணமலையிலுள்ள எந்த றோமன் கத்தோலிக்க ஆலயங்களிலும் எவ்விதமான ஆராதனை நிகழ்வுகளோ, திருப்பலியோ நடைபெற மாட்டாது.

அதனடிப்படையில் இறையிரக்கத் திருத்தலத்தில் மேற்குறிப்பிட்ட திகதி வரை எவ்விதமாக வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெறாது. நாட்டில் நிலவும் வைரஸ் தொற்றின் பாதகமான விளைவுகளின் நிமித்தமே மேற்படி முடிவினை அறிவித்திருக்கின்றோம். மேலும் இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் குடும்பமாக உங்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இந்த ஆபத்தான நிலையை நாமும் நமது நாடும் கடந்துசெல்ல இறைவனை பிரார்த்திப்போம் எனவும்.
மேலும் சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின் படி நோய்த் தொற்றை தவிர்கும் முறைகளை கவனமா பின்பற்றுவோம் என தெரிவிக்கப்படுகிறது .

நன்றி
அருட் தந்தை மதுராங்கன் குரூஸ்
பங்குத் தந்தை
இறை இரக்கத் திருத்தலம்
திருகோணமலை
Powered by Blogger.