தனிமை
தனிமைக்கு அடிமையாகி
எனக்குள்ளே நானேபேசி
தலையைக் குனிந்து
நடந்து சென்று
காண்பவர்களுடன்
கண்தொடர்பை அறுத்து
எனக்கென்றொரு உலகம்
உருவாக்கினேன்
அதில் நானே எல்லாயுமானேன்
தீடீர் என்று ஒரு கூட்டம்
எனை விசரென்றது
அக்ககறையான ஒரு கூட்டம்
வைத்தியரிடம்
அழைத்து சென்றது
ஆராய்ச்சி செய்து
ஆலோசனை செய்து
அடுக்கடுக்காய்
பரிசோதனைகள் செய்து
எல்லாம் சரியாகிடும்
என்று முடிவுக்கு வந்தது.
எல்லாம் பிழையானதாலும்
எல்லாம் வினாவானதாலும்
பொல்லாத வாழ்க்கையில்
எல்லாம் கைவிட்டு போனதாலும்
சொல்லும் படி இருந்த ஓர் உரவு
தன்னைவிட்டு செல்லும்படி
சொன்னாதாலும்
நான் பைத்தியமானேன்
மற்றவர்கள் புத்திசாலியானார்கள்.
இப்போ யாரைமாற்றினால்
எல்லாம் சரியாகும்
என்னையா?
உங்களையா?