மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு!

( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் நிதியின் ஊடாக பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம். முபாரக் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரசின் பாதிப்புக்கள் தொடர்பாக தொடர்ச்சியான கண்காணிப்பு பணியில் பொதுசுகாதார உத்தியோகத்தர்களால் மேற்பார்வை செய்ய வேண்டிய நிலையில் புல்மோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களுக்கு சுமார் 04 இலட்சத்தி 69 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளே வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது சுகாதார உத்தியோகத்தர்,விசேட அதிரடி படையின் பதில் பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரி மற்றும் புல்மோட்டை போலிஸ் நிலைய பொறுப்பதிகரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

