வீதியில் தோப்புக்கரணம் போடவைத்த பொலிஸார் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்!!
ஊரடங்கு நேரம் கொழும்பு டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் (சார்ஜண்ட் மற்றும் கான்ஸ்டபிள்) பொலிஸார் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பொலிசாரின் பாணியில் செயற்பட முனைந்த இந்த இருவர் தொடர்பிலான சம்பவம் வைரலாக மாறியதை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து பணியிலிருந்து இடைநிறுத்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பொலிசாரின் பாணியில் செயற்பட முனைந்த இந்த இருவர் தொடர்பிலான சம்பவம் வைரலாக மாறியதை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து பணியிலிருந்து இடைநிறுத்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
