கிண்ணியாபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

(கிண்ணியா முனீஸ்)
நாளை ஊரடங்கு நீக்கப்பட உள்ளதினால் இதுவரைக்கும் நாம் கடைப்பிடித்து வந்த ஒழுங்குகளை மேலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உதவிய சுகாதாரத்துறை மற்றும் பிரதேச செயலகம் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைவருக்கும் இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதே கட்டுப்பாட்டு நிலைமைகளை எதிர்காலத்தில் நாம் முழுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாக முற்றுமுழுதாக கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எமது பிரதேசத்தை பாதுகாக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டது ...