முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள் : இராணுவத் தளபதி
(கிண்ணியா முனீஸ்)
முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள் - நோன்பு, தொழுகை ஏற்பாடுகளை செய்ய ராணுவம் தயாராகவுள்ளது - சவேந்திர சில்வாகொரோனா தொற்றுக்குள்ளான முஸ்லிம்கள் யாரேனும் இருப்பார்களாயின், அவர்கள் வெளியே வந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொரோனா தொற்றினால், தனிமைப்படுத்தலுக்கு உள்ளானால், ரமழான் நோன்பு பிடிப்பது சிரமமென்றும், அதனால் நோய் அறிகுறிகள் இருந்தால் சொல்லாமல் இருப்போம் என்றும் யாரும் நினைத்து விடாதீர்கள்.
நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளையும், தொழுகை நடக்க வேண்டுமாயின் அதற்கான ஏற்பாடுகளையும் தனிமைப்படுத்தல் முகாம்களில் செய்வதற்கு இராணுவம் தயாராகவே இருக்கின்றது.
எனவே முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
