புத்தளம் - விருதோடை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்கு உலருணவுகள் வழங்கி வைப்பு!!
(கரைத்தீவு ஹிசாம் )
COVID 19 பாதிப்பு காரணமாக ஊரடங்கு சட்டத்தால் அவதியுறும் எம் சொந்தங்களுக்கு கரம் கொடுக்கும் நோக்கில் விருதோடை இளைஞர்கள்களின் முயட்சியில் விருதோடை மக்களின் பாரிய பங்களிப்பில் சுமார் 6.5 Million பெறுமதியான 1600 உலருணவு பொதிகள் விருதோடை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட மற்றும் அயல் கிராமமான ரெட்பானா உட்பட அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடு இன்றி இன்று நேற்றும் உலருணவுகள் வழங்கி வைக்கப்பட்டதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.
மேலும் இத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய விருதோடை சொந்தங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பிரிவதோடு அவர்களுடைய சதக்காவின் நோக்கத்தயும் அல்லாஹ் நிறைவேற்றி வைப்பனாக ஆமீன்
