இன்று உலக சுகாதார தினம் !!!

இன்று உலக சுகாதார தினம் ஆகும். உன்னதமான சேவையைப் புரிந்துவரும் தாதியர்கள் மற்றும் குடும்பநல சுகாதாரப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் ஆண்டாக, 2020ஆம் ஆண்டினை, உலக சுகாதார அமைப்பு - World Health Organization (WHO) - பிரகடனப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் - தற்போது, 2 கோடி 7 இலட்சம் தாதியர்களும் குடும்பநலச் சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா நோய்க்கிருமியின் கோரப்பிடியிலிருந்து - எமது நாட்டையும் ஒட்டுமொத்தமான மனுக்குலத்தையும் காத்து விடுவிக்க, இரவு பகலெனப் பாராது, ஓய்வே இன்றிப் போராடி வருகின்றனர்.
அவர்களது சேவையைப் பாராட்டி இன்றைய நாளிலே அவர்களுக்கு எமது ஆத்மார்த்த நன்றியைத் தெரிவிப்போம்!