ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை சேனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை (02) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.