பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய திர்மானம்!!
(முனீஸ் ஆசிரியர்)
இந்த ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் , உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவது தொடர்பில் இது வரை திர்மாணிக்க வில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்த ஒரு பரிட்சார்த்திக்கும் அநிதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். கண்டி- குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
