இலங்கையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய மோதரை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
