ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவித்தல்!
பொதுமக்கள் தேவையற்ற முறையில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்க முறை ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் போது வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை.
அதேவேளை ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது பிரதேசம் கொரோனா ஆபத்து பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டு இருந்தால் அப்பிரதேசத்தில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை.
