14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன்!!!
யாழ்.உரும்பிராய்- ஆனந்தபுரம் பகுதியில் 27 வயதான இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயதான சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்துவது தொடர்பான விடயம் பொலிஸாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் அதனை நோில் ஆராய்ந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
மேலும் சிறுமியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
