கந்தளாய் அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று : அவரின் குடும்பம் சுயதனிமைப்படுத்தலுக்கு
கந்தக்காடு முகாமில் பணியாற்றும் கந்தளாய் அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த ஆறாம் திகதி விடுமுறையில் வந்து திருகோணமலை மற்றும் அணுராதபுரம் தலாவ பிரதேசங்களுக்கும் சென்றுள்ளார்.
அதன் பின் ஒன்பதாம் திகதி கந்தக்காடு முகாமிற்கு சென்று பரிதோசனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருடைய வீட்டார்கள் மற்றும் அயலவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
