சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று : கிழக்கு மாகாணத்திலும் மாபெரும் கண்டனப் போராட்டம்!
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று மட்டக்களப்பில் காணாமல் போன உறவுகளின் ஏற்பாட்டில் காலை 11 மணியளவில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
குறித்த போராட்டம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து அரசரடி ஊடாக நடைபவனியாக காந்தி பூங்கா வரை பல கோசங்கள் எழுப்பியவாறு வந்தடைந்தது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு நகர் முதல்வர் சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டு காணாமல் ஆக்கபட்ட உறவுகளுக்கு நீதி கோரும் போராட்டத்தை காணாமல் போன உறவுகளுடன் இணைந்து மேற்கொண்டனர்


