வான் கதவுகள் திறப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!!
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் தேக்கத்தின் பிரதான இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் தொடரும் கடும் மழைக்காரனமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டுள்ளமையினால் குறித்த நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதோடு அருகாமையில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
