பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி !!!!
நுவரெலியா பஸ்தரிப்பிடத்தில் இ.போ.ச பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்
நுவரெலியா டிப்போவிலிருந்து பஸ்தரிப்பிடத்திற்கு பஸ்ஸிலே குறித்த நபர் மோதுண்டு சில்லில் சிக்கி பலியானதாகவும் இச்சம்பவம் இன்று பிற்பகல் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வீதியை கடக்க முற்பட்டபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
