தவறவிடப்பட்ட ஒரு தொகை பணம் முகப்புத்தகத்தை பயன்படுத்தி உரியவரிடம் சேர்த்த அதிபர்!!!
வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகை பணத்தை மீட்ட பாடசாலை உப அதிபர் ஒருவர் உரியவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்திருக்கின்றார்.
சங்கானை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்று இயந்திரத்தில் ஒரு தொகை பணத்தை எடுத்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் அதனை தவறவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வங்கி கிளைக்கு சென்றிருந்த சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் பேஸ்புக் ஊடாக உரிமையாளரை கண்டுபிடித்து, உரிய தாதிய உத்தியோகஸ்த்தரிடம் பத்திரமாக சேர்த்துள்ளார்.
உப அதிபரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றனர்.
