மாகந்துரே மதூஷின் தகவலால் 10 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!!!!!
சுமார் 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு கொட்டிகாவத்தை பிரதேசத்திலிருந்து கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் புள்ளியான மாகந்துரே மதுஷ், தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த மாகந்துரே மதுஷ் நேற்று குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
