நாளை காலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல் : கட்டுநாயக்க பொலிஸ்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு நாளைக்காலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படவுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
