யாழ்ப்பாணத்தில் சில பகுதி முடக்கம்!!!!
நேற்றையதினம் குருநகர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதிக்குள் வெளி நபர்கள் உட்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பிரதேசங்களில் நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

