கொரோனா தொற்று குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை!!!!
கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாளாந்த 500 புதிய தொற்றாளர்கள் பதிவாவதுடன் 3 அல்லது 5 மரணங்கள் பதிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் உடம்பில் உள்ளவர்கள் இன்றும் வௌியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுவிட்டதாக எமக்கு உறுதியளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
