யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
அனுராதபுரம் பகுதியில் யாசகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அனுராதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவருடன் தொடர்புகளை பேணிய மேலும் 81 யாசர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்ல நேற்று பிற்பகல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட யாசகர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
