கொரோனா தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழப்பு!
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்ட்ட PCR பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஆகிய நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

