Header Ads

Breaking News
recent

அரசாங்கத்திடம் முன்வைக்கபட்டுள்ள விசேட கோரிக்கை…!


நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் காய்கறிகள் மற்றும் பழவகைகளை நாடு முழுவதும் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் விசேட பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அச்சம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான நீண்டகால வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அகில இலங்கை விவசாய சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் பண்டிகைக்காலங்களில் நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.