நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 8.30 இற்கு இந்த விசேட உரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு குறித்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
இதன்போது நாட்டு மக்களுக்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
