Covid-19 கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு மீற்றர் போதாது : சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர்!!!!
கொரோனா வைரஸின் புதிய நடவடிக்கைகளின் அடிப்படையில் சமூக இடைவௌியை ஒரு மீற்றருக்கு மேல் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
ஒன்றரை அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவௌியை கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோயை கட்டுப்படுத்தும் பிரதானமான நடைமுறை மக்களின் நடவடிக்கைகளிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
