கிழக்கு மாகாணத்தில் 5 வது Covid-19 மரணம்
(ஹாசிம் சஜித் - இறக்காமம்)
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயதுடைய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது மரணமாகவும், மாகாணத்தில் 05 வது மரணமாகவும் பதிவாகியுள்ளது.
