Header Ads

Breaking News
recent

"கவன் சீலை போராட்டம்" கல்முனையில் முன்னெடுப்பு!!!!


(நூருல் ஹுதா உமர்)
கொரோனா தொற்றினால்  தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும்  பல்வேறு நாடுகளிலும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக தாருஸ்ஸபா மையம் மற்றும் அல்- மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்கா அமைப்பினர் உட்பட கல்முனை பொது அமைப்புக்கள் பல இணைந்து கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னாள் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் "கவன் சீலை போராட்டம்" ஒன்றை இன்று மாலை முன்னெடுத்தனர்.


அல்- மீஸான் பௌண்டஷன் - ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர், பிராந்திய இணைப்பாளர்கள்,.தாருஸபா அமைய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பலரும் இனம், பிரதேசம் கடந்து இந்த போராட்டத்தை நாடு முழுவதிலும் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.