கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழப்பு !!!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பனாகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவரும், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.
