Header Ads

Breaking News
recent

ஒன்பது நாட்களில் வாகன விபத்தில் எத்தனை பேர் பலி

 கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இந்தக் காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன இந்த விபத்துக்களினால் 122 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் உயிரிழப்புக்கள் இல்லாத 130 வாகன விபத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

Powered by Blogger.