திருமலை மாட்டிறைச்சி கடை ஊழியரின் மனைவியின் சகோதரருக்கு கொரோனா தொற்று இல்லை
திருகோணமலை மாட்டிறைச்சிக்கடை கோரோனா தொற்றாளரின் மனைவியின் சகோதரர் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் கல்வி பயில்கிறார்.
எனினும் அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் Negative என முடிவு கிடைத்துள்ளது.
எனவே எவரும் அச்சம டைய வேண்டிய அவசியமில்லை என கல்லூரியின் அதிபர் தெரித்துள்ளார் .
மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னுரிமை வழங்கி கல்லூரியின் நட்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை பரப்பி வருகின்றதகவும் கல்லூரியின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இது தொடர்பில் எவரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

