வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் இன்று நாடு திரும்புகின்றனர் : இராணுவத் தளபதி!!!
வெளிநாடுகளிலிருந்து சுமார் 800 இலங்கையர்கள் இன்று நாடு திரும்ப உள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாட்டை வந்தடையும் அனைவரையும் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
