திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் கைக்குண்டு மீட்பு!!
(திருகோணமலை நிருபர் - பாருக்)
கந்தளாய் குளத்தினை அண்டிய காட்டுப்பகுதியில் இக் கைக்குண்டினை மீட்டுள்ளதாகவும், கந்தளாய் குளத்துப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்களினால் கந்தளாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையால் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கைக்குண்டு சிறிய பிளாஸ்டிக் போத்தலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கைக்குண்டினை சூரியபுர பொலிஸ் விசேட அதிரடைப்படையினரால் நீதிமன்ற அனுமதியுடன் வெடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
