Header Ads

Breaking News
recent

பஸ் விபத்தொன்றில் 13 பேர் படுகாயம்!!!


நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்குவீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் பஸ்ஸொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிபிளையிலிருந்து மரண வீடொன்றிற்கு தலவாக்கலை நோக்கி பயணித்த சிறிய ரக பஸ்சொன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பவுசர் ஒன்றுடன் மோதி பாதையில் தடம் புரண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரனைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளனர் எனவும், அதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Powered by Blogger.