Header Ads

Breaking News
recent

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி!!!



யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.