Header Ads

Breaking News
recent

பவித்ரா வன்னியாராச்சியிற்கு, சமூக வலைத்தளங்களில், போலி தகவல் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!



அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் குறைபாடுகள் காணப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைத்து, அவர் வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொடர்ந்தும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையிலே சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.