மைத்திரிக்கு எதிராக வழக்கு தொடர தடங்கல் ஏற்படாது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை வைத்து வழக்கு தொடர எந்த தடங்கலும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் தலைவரான சட்ட மேதை பிரத்திபா மஹானாம இதனை குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியின் சார்பில் சட்டத்தரணிகள் அவரது பதவி சிறப்புரிமை பற்றி சுட்டிக்காட்டி வழக்கை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுக்கலாம். ஆனாலும், வோட்டார்ஸ் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு நட்ட ஈடும் செலுத்த நேரிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
