Header Ads

Breaking News
recent

ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!!!!!

ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மற்றும் ராகம பகுதிகளில், விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து, ஒரு கிலோகிராம் ஹெரோயினும், 750 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
Powered by Blogger.