புதிய மின் இணைப்பிற்கான மின் கம்பங்கள் நடும் பணிகள் ஆரம்பம்!!!!!
(புத்தள நிருபர்)
புத்தளம் காரைதீவு தெற்கில் அமைந்துள்ள கல்லடிபிரதேசத்தில் இன்று (03) பிற்பகல் மின் இணைப்பிற்க்கான மின் கம்பங்களை நடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைபவம் வண்ணத்துவில்லு பிரதேச சபை உப தலைவர் எஸ்,எச்.எம். இப்ராஹீம் (ஷாஜஹான்) மற்றும் நடந்து முடிந்த பாராளுமன்ற வேட்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் மூலம் கல்லடி மக்கள் மகிழ்ச்சியுடன் கூடிய ஆதரவினையும் நன்றியையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


