இராணுவத்தில் இணையுமாறு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு!!!
இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
இராணுவத்தில் தமிழர்களையும் இணைந்துக்கொள்ளுமாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
18 வயது முதல் 26 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 2 அங்குலம் உயரமானவர்கள், இராணுவத்தில் இணைய தகுதியானவர்கள் என அவர் கூறினார்.
