சீனா இலங்கைக்கு மேலும் 1,100 மில்லியன் டொலரை வாரி வழங்குகிறது
இலங்கைக்கு சீனா 1,100 மில்லியன் டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.
சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 500 மில்லியன் டொலர் கடன் திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் டொலர் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.
