Header Ads

Breaking News
recent

புதிய கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டம்



விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது.

எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் சமர்ப்பிக்க அதிக நேரம் கோரியதைத் தொடர்ந்து, உத்தேச சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகவே சட்டரீதியான தடைகளைத் தீர்த்த பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல் சட்டத்தில் திருத்தம் வடிவில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

குறித்த பரிந்துரையின்படி, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் 50 சதவீத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கலப்பு முறையின் கீழும் மீதமுள்ளவை கடந்த முறையின் கீழும் இடம்பெறும்.

இருப்பினும், டிலிமிட்டேஷன் செயல்முறை ஒரு சட்டபூர்வமான சிக்கலை கொண்டுவந்துள்ள நிலையில் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் குறித்த விடயத்தை திருத்துவதற்கும் புதிய சட்டத்தை கொண்டுவரவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் ஒரு புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

குறித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 70 சதவீத உறுப்பினர்கள் கடந்த கால தேர்தல் முறையின் கீழும் தபால் மூல வாக்களிப்பு உட்பட மிகுதி நடவடிக்கையை விகிதாசார முறைப்படியும் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

மாகாண சபைகளை அமைத்து அதன் மூலம் உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம் கோரும் அதேவேளை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவும் வலியுறுத்துகிறது.

இருப்பினும், சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் 13 வது திருத்தம் ஊடாக அதிகார பகிர்வினை வழங்க கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.