கர்த்தினாலுக்கும் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை!!
ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சர்வ மதத் தலைவர்களுக்கு இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரியப் பீடங்களின் தலைமை தேரர்களிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
மேலும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடத்திலும் ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீரவினால் இவ் அறிக்கை இன்று பகல் கையளிக்கப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
