காலி மாவட்டத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா!

காலி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 43 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. 28 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், ஆசிரியர்கள் சிலருக்கும் வைரஸ் பரவியுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.