கிண்ணியா மக்களுக்கான கிண்ணியா பிரதேச செயலாளரின் வேண்டுகோள்
கிண்ணியா மக்களுக்கான கிண்ணியா பிரதேச செயலாளரின் வேண்டுகோள்
கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை 9:30 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையிலான குழு கொரோனா வீரியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது இதில் கிண்ணியா பிரதேச செயலாளர், இராணுவத்தளபதி மேஜர் திஷாநாயக, அதேபோன்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்,வர்த்தக சங்கத் தலைவர், மற்றும் MOH அஜித் ஆகியோர் உலமா சபை தலைவர் என்று பலர் கலந்துகொண்டுள்ளனர். அனைவரும் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு
+50% வீதமான மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு அனுமதி
+பாடசாலை பிரத்தியோக வகுப்புகளுக்கு 50% வீதமான மாணவர்கள் மாத்திரமே அனுமதி
+தனியார் வகுப்புகள் முற்றாகத் தடை
+ சந்தைகளுக்கு 50% வீதமான மக்கள் மாத்திரமே அனுமதி
+ஒன்று கூடுதல் தடை
+பள்ளிவாயல்கள் 50% வீதமான மக்களே செல்ல வேண்டும்.
+பொதுமக்கள் தேவைகளுக்கு தனது வீடுகளிலிருந்து ஒரு நபர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்

