இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 305 பேர் அடையாளம்!!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 305 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 810 குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 885 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 18 ஆயிரத்து 25 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.