Header Ads

Breaking News
recent

நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்



கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் நாளை (08) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் மஹரகம காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

காலி மாவட்டத்தின் ஹபராதுவ காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கொக்கலை 1, கொக்கலை 2, மீகாகொடை, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.