இரண்டரை வயது குழந்தைக்கு கவனயீனத்தால் நேர்ந்த அவலம்..!

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் – ஜனதா டிவிசனில் இரண்டரை வயது ஆண் குழந்தையான ஜெயசுந்தரம் சுலக்ஷனன், நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டின் அருகில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் மாட்டு சாணம் சேகரிக்கும் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.